சென்செக்ஸ்  234 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ்  234 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 234 புள்ளிகள் (0.38 சதவீதம்) உயர்வடைந்து 61,963 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 111 புள்ளிகள் (0.61 சதவீதம்) உயர்ந்து 18,314 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது ஆரம்ப நேரத்து சரிவை சரி செய்து ஏற்றமடைந்தது. காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 249.86 புள்ளிகள் உயர்வடைந்து 61,979.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 53.80 புள்ளிகள் உயர்ந்து 18,257.20 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலப்பு சூழல்களுக்கு மத்தியில் வீழ்ச்சியில் தொடங்கினாலும் விரைவில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன. அதனைத் தொடர்ந்து ஹெவிவெயிட் குறியீடுகளான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் உயர்வு காரணமாக, இரண்டாவது நாளாக லாபத்தில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 234.00 புள்ளிகள் உயர்வடைந்து 61,963.68 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 111.00 புள்ளிகள் உயர்ந்து 18,314.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, ஐடிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எம் அண்ட் எம், டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. நெஸ்ட்லே இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in