பங்குச்சந்தை | சென்செக்ஸ் 216 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 216 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 278 புள்ளிகள் உயர்வடைந்து 61,839 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 81 புள்ளிகள் உயர்ந்து 18,263 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கி தொடர்ந்தது. காலை 09:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 216.91 புள்ளிகள் உயர்வடைந்து 61,777.55 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 64.35 புள்ளிகள் உயர்ந்து 18,246.10 ஆக இருந்தது.

அமெரிக்க கடன் உச்சவரம்பு நெருக்கடி விவகாரம் விரைவில் ஒரு இயல்புநிலைக்கு வரும் என்ற நம்பிக்கை குறிப்புகளுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகள் சாதகமான போக்குக்கு திரும்பியது. இதனைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளும் இரண்டுநாள் சரிவிலிருந்து மீண்டு இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, கோடாக் மேகந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, டிசிஎஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. எம் அண்ட் எம் பங்குகள், டாடா மோட்டர்ஸ், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, டிசிஎஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in