பங்குச்சந்தை | சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்வு 

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்வு 
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்வடைந்து 61,900 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 18,297 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 79.79 புள்ளிகள் உயர்வடைந்து 61,844.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி34.80 புள்ளிகள் உயர்ந்து 18,299.20 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவிய குழப்பமான சூழல் இருந்த போதிலும் இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், டெக் மகேந்திரா, டிசிஎஸ், விப்ரோ பங்குகள் உயர்வில் இருந்தன. சன்பார்மா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in