பங்குச்சந்தை | சென்செக்ஸ் 186 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 186 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்வடைந்து 57,794 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 17,009 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:20 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 186.67 புள்ளிகள் உயர்வடைந்து 57,800.39 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57.40 புள்ளிகள் உயர்வடைந்து 17,009.10 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய கலவையான சூழல்கள், மாதாந்திர எஃப் அண்ட் ஒ காலாவதியாவது ஆகியவைகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வில் இருந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in