பொதுத் துறை வங்கிகளிலேயே கடன், சொத்து வளர்ச்சியில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடம்

பொதுத் துறை வங்கிகளிலேயே கடன், சொத்து வளர்ச்சியில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடம்
Updated on
1 min read

2022-23-ம் ஆண்டின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கையின்படி கடன் வளர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் அரசு வங்கிகளில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (பிஓஎம்) முதலிடத்தில் உள்ளது.

புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வருடாந்திர வளர்ச்சி அடிப்படையில் மொத்த கடன் அளவில் 21.67 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. கரோனா பேரிடர் நிலவிய நிலையிலும் கடந்த 10 காலாண்டுகளில் வங்கி கடன் வளர்ச்சி சதவீத அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 19.80 சதவீத வளர்ச்சியுடன் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவும், 16.91 சதவீத வளர்ச்சியுடன் எஸ்பிஐயும் உள்ளன.

சில்லறை கடன், விவசாயம், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன்களின் அடிப்படையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 19.18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in