Published : 04 Feb 2023 04:44 AM
Last Updated : 04 Feb 2023 04:44 AM

இந்தியா சிமென்ட்ஸ் லாபம் ரூ.133 கோடியாக உயர்வு

மும்பை: சென்னையைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நடப்பு 2022-23-ம் நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.133.29 கோடியை ஈட்டியுள்ளது. இது, இந்நிறுவனம் முந்தைய 2021-22-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம்ரூ.16.24 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

மத்திய பிரதேசத்தில் துணை நிறுவனமான ஸ்பிரிங்வே மைனிங் விற்பனை செய்யப்பட்டதையடுத்து மூன்றாவது காலாண்டில் லாபம் 7 மடங்கு உயர்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,160.3 கோடியிலிருந்து 10 சதவீதம் முன்னேற்றம் கண்டு ரூ.1,281 கோடியைத் தொட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சிமென்ட் மற்றும் கிளிங்கர் விற்பனை 21.08 லட்சம் டன்னிலிருந்து 3 சதவீதம் உயர்ந்து 21.82 லட்சம் டன் ஆனது.

செலவினங்கள் அதிகரித்து வருவதையடுத்து அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா சிமென்ட்ஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x