Published : 25 Jan 2023 06:01 PM
Last Updated : 25 Jan 2023 06:01 PM

சென்செக்ஸ் 774 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 774 புள்ளிகள் (1.27 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 60,205 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 226 புள்ளிகள் (1.25 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 1,892 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 09:43 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 282.61 புள்ளிகள் சரிந்து 60,696.14 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 74.60 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18, 043.70 ஆக இருந்தது.

நிதி மற்றும் வங்கிப் பங்குகளின் வீழ்ச்சி, மாதாந்திர எஃப் அண்ட் ஓ காலாவதி போன்றவை முதலீட்டாளர்களிடையே பாதிப்புகளை ஏற்படுத்தியசால் புதன்கிழமை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 773.69 புள்ளிகள் உயர்வடைந்து 60,205.06 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 226.35 புள்ளிகள் உயர்வடைந்து 17,891.95 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், ஐடிசி பங்குகள் உயர்ந்திருந்தன. நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x