Published : 15 Jan 2023 04:00 AM
Last Updated : 15 Jan 2023 04:00 AM

கோவையில் இருந்து 5 நாட்களில் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

பிரதிநிதித்துவப் படம்

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து கடந்த 5 நாட்களில் ஏழு டன் எடையிலான கரும்பு, மஞ்சள், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் ஷார்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள், வாழை இலை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன. 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x