சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்றும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 304 புள்ளிகள் (0.5 சதவீதம்) சரிவடைந்து 60,353 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் (0.28 சதவீதம்) சரிந்து 17,992 ஆக இருந்தது.

பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கிய போதும் விரைவில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 10:15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 61.49 புள்ளிகள் உயர்ந்து 60,718.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.35 புள்ளிகள் உயர்ந்து 18,045.30 ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் டிசம்பர் மாத கூட்டத்தின் முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தது. பணவீக்கம் குறையும் வரையில், 2023ம் ஆண்டில் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது என்று அமெரிக்க பெடரல் வங்கி அறிவித்திருந்தது. இதனால் இன்றைய தொடக்க லாபத்தை தக்க வைக்க முடியாமல் தொடர்ந்த இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தது. இது வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் 608 புள்ளிகள் (1 சதவீதம்) வரை சரிந்து 60,049 வரைச் சென்றது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 304.18 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,353.27 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50.80 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,992.15 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எல் அண்ட் டி, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்டஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. மறுபுறம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டைட்டன் கம்பெனி, இன்பேசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in