Published : 21 Dec 2022 10:14 AM
Last Updated : 21 Dec 2022 10:14 AM

சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்து 61,929 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 18,450 ஆக இருந்தது.

காலை 09:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 129.63 புள்ளிகள் உயர்வடைந்து 61,831.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79.25 புள்ளிகள் உயர்வடைந்து 18,464.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாகதமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவிலிருந்து மீண்டு புதன்கிழமை ஏற்றத்தில் தொடங்கின. வங்கி உள்ளிட்ட அனைத்து வகை பங்குகளும் சாதகமான போக்கையே காட்டின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை விப்ரோ, எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் உயர்வில் இருந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x