தங்க நகைக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை: ஒரு விரைவுப் பார்வை

தங்க நகைக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை: ஒரு விரைவுப் பார்வை
Updated on
1 min read

குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடன் கிடைத்தால் போதும் என்று மட்டுமே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நகைக்கடன் பெறும்போது சில முக்கியமான விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும்.

பாதுகாப்பு முக்கியம்: அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும்போது வீட்டை அடைமானம் வைத்து வாங்குகிறோம். வீட்டை யாரும் அசைத்து எடுத்துச் சென்ற விட முடியாது. எனவே அடமானமாக கொடுக்கும் பொருளின் பாதுகாப்பு பற்றி கவலையில்லை. ஆனால் தங்கம் அப்படிபட்டது அல்ல.

கொள்ளை போகும் பொருள் என்பதால் கவனம் தேவை. சில நிறுவனங்களில் அடகு வைக்கும் தங்க நகைகளைப் பத்திரமாக வைத்திருக்கும் வசதிகள் இருக்காது. கடன் தொகையைச் செலுத்திய பிறகு உங்கள் நகைகள் மீண்டும் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். அதற்குரிய நிறுவனமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வட்டி எவ்வளவு?

அதிக பணம் தேவை என்பதால் அதிகமாகக் கடன் தரும் வங்கிகளையோ, நிதி நிறுவனங்களையோ அணுகலாம். ஆனால் அதிகமான பணத்தை அளிக்கும் நிறுவனங்கள் அதிகமான வட்டியையும் கேட்கலாம். எனவே, வட்டியும் பிற கடன் வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

கட்டணங்கள்

பெரும்பாலான வங்கிகளில் தங்கநகைக் கடன் வழங்க செயல்பாட்டுக் கட்டணம் வசூலிப்பதில்லை. எனினும் சில வங்கிகளில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தங்க நகை கடன் வாங்கின பலரும் சரியாக கட்டாததால் மூழ்கி போனதாக கூறுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் தங்க நகைக்கான மாதாந்தரத் தவணையை தவறவிடுவது தான். இதனால் அடகு வைத்த தங்கத்தை இழக்க நேரிடும்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in