Published : 19 Jun 2022 06:00 AM
Last Updated : 19 Jun 2022 06:00 AM

அரசின் நேரடி வரி வருவாய் 3 மாதங்களில் 51 % உயர்வு

புதுடெல்லி: அரசின் நேரடி வரி வருவாய் 51% அதிகரித்து ரூ.2.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் 15 வரையிலான காலத்தில் இத்தொகை வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகை ரூ.1.85 லட்சம் கோடியாகும்.

முன்கூட்டியே வரி செலுத்துவது 49% அதிகரித்துள்ளது. இவ்விதம் செலுத்தப்பட்ட தொகை ரூ.42,680 கோடியாகும். முந்தைய ஆண்டு வசூலான தொகை ரூ.28,779 கோடியாகும். நிறுவனங்கள் முன்னதாக செலுத்தும் வரி விகிதம் 45% அதிகரித்து ரூ.26,798 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வசூலான தொகை ரூ.18,357 கோடியாகும். தனி நபர் வருமான வரி பிரிவில் முன்கூட்டியே செலுத்தும் தொகை 52% உயர்ந்து ரூ.15,881 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகை ரூ.10,422 கோடியாகும்.

இதில் கொச்சி 134% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மும்பை 60%, டெல்லி 57% வளர்ச்சியை எட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x