

கார்களின் விலையை ரூ.35,000 வரை டாடா மோட்டார்ஸ் உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. பட்ஜெட்டில் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதால் உடனடியாக விலையை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் ரூ.35,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல ஹூண்டாய் நிறுவனமும் 3,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் 3.20 லட்சம் முதல் ரூ.30.79 லட்சம் வரை கார் களை விற்பனை செய்கிறது. ஹோண்டா கார்ஸ் இந்தியாவும் கார் களின் விலையை 4,000 ரூபாய் முதல் ரூ.80,000 வரை உயர்த்த திட்டமிட்டி ருக்கிறது. இந்த நிறுவனம் ரூ.4.27 லட்சம் முதல் ரூ.25.23 லட்சம் வரை கார் களை விற்பனை செய்கிறது.