வருவாய் பற்றாக்குறை மானியம்; 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

வருவாய் பற்றாக்குறை மானியம்; 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு
Updated on
1 min read

இந்த நிதியாண்டில் 3வது தவணையாக 17 மாநிலங்களுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை ரூ. 9,871 கோடி வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கு இந்த மாதத்தில் 3வது தவணையாக ரூ.183.67 கோடியும், இந்த நிதியாண்டின் கடந்த 3 மாதத்தில் மொத்தமாக ரூ.551.01 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசன சட்டத்தின் 275வது பிரிவின் கீழ், மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. பகிர்வுக்கு பின்பு மாநிலங்கள் சந்திக்கும் வருவாய் பற்றாக்குறை இடைவெளியை போக்குவதற்காக மாத தவணை முறையில் இந்த மானியங்கள் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி வழங்கப்படுகின்றன.

தமிழகம் உட்பட 17 மாநிலங்களுக்கு, வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த மாநிலங்கள் பெறும் மானியத்தின் அளவை, நிதி ஆணையம் முடிவு செய்கிறது. வருவாய் மதிப்பீடு மற்றும் மாநிலத்தின் செலவு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி அடிப்படையில் இந்த மானியம் பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் 2021-22ம் நிதியாண்டுக்கான பகிர்வு மதிப்பீட்டையும், நிதி ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

2021-22ம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 1,18,452 கோடி வழங்க 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த மானியம் 12 மாத தவணைகளாக மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு 3வது தவணையாக ரூ.183.67 கோடியும், இந்த நிதியாண்டின் கடந்த 3 மாதத்தில் மொத்தமாக ரூ.551.01 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தவணையுடன், இந்த நிதியாண்டின் முதல் 3 மாதத்தில் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.29,613 கோடியை பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in