Published : 04 Dec 2015 01:51 PM
Last Updated : 04 Dec 2015 01:51 PM

இவரைத் தெரியுமா? - அனில் குமார் ஜா

என்டிபிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு). கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

பாட்னா அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் 1977-ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர். பிறகு 1996-ம் டெல்லி தொழிலாளர் சட்டம் படித்தவர்.

1977-ம் ஆண்டு என்டிபிசி நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார். இந்த துறையில் 38 வருட அனுபவம் மிக்கவர்.

நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் குழுவில் இணைந்தார். தொழில்நுட்ப பிரிவின் இயக்குநராக பொறுப்பேற்றார்.

நிறுவனத்தின் மரபு சாரா எரிசக்தி, கொள்கை முடிவுகள், தொழில்மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட அனைத்துக்கும் பொறுப்பானவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x