சிறு தானியங்களை ஊக்குவிப்பதற்கான 5 ஆண்டுத் திட்டம்: ஐஐஎம்ஆரும், அபேடாவும் தயாரிப்பு

சிறு தானியங்களை ஊக்குவிப்பதற்கான 5 ஆண்டுத் திட்டம்: ஐஐஎம்ஆரும், அபேடாவும் தயாரிப்பு
Updated on
1 min read

சிறுதானியங்கள், சிறுதானியப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாலும், சிறுதானியத் துறைக்கு அரசு அளித்துவரும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபேடா, இந்திய சிறுதானிய ஆராய்ச்சி கழகத்துடனும் (ஐஐஎம்ஆர்), இதர பங்குதாரர்களுடனும் இணைந்து சிறு தானியம், சிறு தானியப் பொருட்களை ஊக்குவிப்பதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தைத் தயாரிக்க உள்ளது.

இதற்காக அபேடா-வும், ஐஐஎம்ஆர்-ரும் இணைந்து, இம்மாதம் 2ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அபேடா தலைவரின் தலைமையில் நடைபெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் இலக்கை எட்டும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2021-2026-இல், சிறுதானியம், சிறுதானியப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்ட அறிக்கையை அபேடா தயார் செய்து வருகிறது.

இதையடுத்து சிறுதானிய தொகுப்புகளைக் கண்டறிவது, இந்திய சிறு தானியப் பொருட்களை ஊக்கப்படுத்துவதற்காக சர்வதேச சந்தைகளைக் கண்டறிவது உள்ளிட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in