புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் செயற்கைப் பொருள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் செயற்கைப் பொருள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

உயிருள்ளவை போன்றே புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் செயற்கைப் பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

எரிபொருள் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறைகளுகளில் உயிரிகளால் உந்தப்பட்ட பொருட்களுக்கான வாய்ப்புகளை ஜவகர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி உருவாக்கி உள்ளது

ஜவகர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சியின் மூலம் எரிபொருள் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறைகளில் உயிரிகளால் உந்தப்பட்ட பொருட்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

உயிருள்ளவை போன்றே புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் செயற்கைப் பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எளிமையான இயற்கை வடிவமைப்பு முறைகளை கொண்டு சிக்கலான வலைப் பின்னல்களை அமைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொருட்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் தன்மையின் காரணமாக எரிசக்தி மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பாலிமர்களாக அவை பயன்படும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் ஆய்வு மையத்தின் பேராசிரியர் சுபி ஜார்ஜ் மற்றும் அவரது குழுவினர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

பட்நாகர் விருது 2020-ஐ பெற்றவரான சுபி ஜார்ஜ் மற்றும் அவரது குழுவினரின் ஆராய்ச்சி நேச்சுரல் கம்யூனிகேஷன்ஸ் என்னும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in