

புதுடெல்லி: டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க உலக தலைவர்கள், பிரதிநிதிகள், அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்குவதற்காக 5 நட்சத்திர ஓட்டல்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதனால், சில ஓட்டல்களில் ஒரு நாள் கட்டணம் பல லட்சங்களாக அதிகரித்தது. இணையதளத்தில் தேடியபோது, டெல்லி லீலா பேலஸில் ஒரு அறைக்கான ஒரு நாள் கட்டணம் ரூ.6.2 லட்சம், ஐடிசி மவுரியாவில் ரூ.2.5 லட்சம், தி லோதியில் ரூ.1.2 லட்சம், லீ மெரிடியனில் ரூ.1 லட்சம் வரை உயர்ந்திருந்தது தெரியவந்துள்ளது.