பங்குச் சந்தையில் ஏற்றம்

பங்குச் சந்தையில் ஏற்றம்
Updated on
1 min read

பங்குச் சந்தையில் இரண்டாம் நாளாக வியாழனன்றும் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 36 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 21373 புள்ளிகளைத் தொட்டது.

லார்சன் அண்ட் டியூப்ரோ, ஹெச்டிஎப்சி, இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, ஐடிசி, பார்தி ஏர்டெல், கெயில் இந்தியா ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றதும் பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். தேசிய பங்குச் சந்தையில் 7 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6,345 புள்ளிகளானது.

ஆக்ஸிஸ் வங்கி பங்கு 2.48 சதவீதமும், கெயில் இந்தியா 2.43 சதவீதம், சன் பார்மா 1.90 சதவீதம், ஹெச்டிஎப்சி 1.64 சதவீதம், பார்தி ஏர்டெல் 1.58 சதவீதம், பிஹெச்இஎல் 0.92 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்கு விலை கடுமையான சரிவைச் சந்தித்தது. இந்நிறுவனப் பங்கு விலை 2.82 சதவீத அளவுக்குச் சரிந்தது. ஒஎன்ஜிசி 1.33 சதவீதம், என்டிபிசி 1.09 சதவீதம், கோல் இந்தியா 0.99 சதவீதம், டிசிஎஸ் 0.89 சதவீதம், டாடா ஸ்டீல் 0.84 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்தன.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,453 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,255 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மொத்தம் ரூ. 1,876 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in