உணவு பாதுகாப்பு: டபிள்யூ.டி.ஓ-வில் தீர்வு காணப்படும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

உணவு பாதுகாப்பு: டபிள்யூ.டி.ஓ-வில் தீர்வு காணப்படும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
Updated on
2 min read

இந்தியா மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்புக்கு சர்வதேச வர்த்தக அமைப்பில் (டபிள்யூ.டி.ஓ.) நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

தனது துறையின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து செய்தி யாளர்களுக்கு விளக்கிய அவர், உணவு பாதுகாப்பு என்பது நமது நாட்டின் இறையாண்மையாகும். இதை டபிள்யூ.டி.ஓ. உறுப்பினர்கள் நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலையைப் போன்று வேறு சில நாடுகளிலும் உள்ளது. விவசாயி களிடமிருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்து அதை ஏழைகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யும் வழக்கம் இங்கு உள்ளது. இந்த நடைமுறை இந்தியாவின் இறையாண்மை மட்டுமல்ல உரிமையும் கூட என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த மாநாட்டில் இந்தியாவின் நிலைப் பாடு தெளிவாக எடுத்து வைக்கப் பட்டது. இருப்பினும் கூட்டத்தில் திட்டவட்டமான முடிவு எடுக்கப் படவில்லை. விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் மாதம் டபிள்யூ.டி.ஓ. அலுவலகம் செயல்படத் தொடங்கியுள்ளது.

டபிள்யூடிஓ வகுத்துள்ள விதிகளில் மாற்றம் செய்தால் மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இந்தியாவின் இந்த நிலைப் பாடு காரணமாக இந்தியா தனி மைப்படுத்தப்படுமா? என்று செய்தி யாளர்கள் கேட்டதற்கு, இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலையை தெளிவாக முன் வைத்துவிட்டது. இதற்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு டபிள்யூ டிஓ-விடம்தான் உள்ளது. மேலும் உறுப்பு நாடுகள் இந்தியாவின் நிலையை நன்கு புரிந்து கொண்டுள்ளன என்றார்.

இந்தியா தனிமைப் படுத்தப்பட்டு விடும் என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். பிற நாடுகள் இந்தியாவின் நிலையை உணர்ந்து, ஆதரவு நிலையை எடுத்துள்ளன. சமீபத்தில், தான் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு வர்த்தக அமைச்சர் இந்தியாவின் நிலையை ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் குறிப் பிட்டார்.

வேளாண் தொடர்பான விவாதக் கூட்டங்கள் இனி தொடர்ந்து ஜெனீவாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகளை இந்தியா முன் வைத்துள்ளது. இதில் எதை ஏற்பது என்பதை டபிள்யூ.டி.ஓதான் தீர்மானிக்க வேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.

வேளாண் பொருள்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் கணக்கிட வேண்டும் என்று மத்திய அரசு டபிள்யூடிஓ அமைப்பை வலியுறுத்தியுள்ளது. இதற்கான விதிமுறைகள் வகுக்கப் பட்டால்தான் விவசாயிகளிட மிருந்து வேளாண் பொருள்களைக் கொள்முதல் செய்ய முடியும் என்றும் அதை குறைந்த விலையில் ஏழைகளுக்கு அளிக்க முடியும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இதற்கான கொள்கையை டபிள்யூடிஓ வகுத்து விட்டால் பிறகு விதியை மீறுவதாக குற்றம் சாட்ட முடியாது என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

மொத்த வேளாண் உற்பத்தி அளவில் 10 சதவீதம் மட்டுமே உணவு மானியமாக அளிக்க வேண்டும் என்று டபிள்யூ.டி.ஓ விதிமுறைகள் கூறுகிறது. ஆனால் உணவுப் பொருள்களின் விலை 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலையையே டபிள்யூடிஓ நிர்ணயித்திருப்பதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (டிஎப்ஏ) கையெழுத்திடுவதற்கு இந்தியா தயாராக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

டிஎப்ஏ அமலுக்கு வந்தால் சுங்க கட்டுப்பாடுகள் எளிமையாகும், வர்த்தகர்களின் பரிவர்த்தனை கட்டணம் குறையும்.

ஜி 20 மாநாடு

இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் மாநாட்டில் இந்தியா சார்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள உள்ளார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை பெற்று வருவதால் இம்மாதம் 20 மற்றும் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவில் கெய்ன்ஸில் நடைபெறும் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்கிறார்.

பிரதிநிதிகள் மாநாட்டை அடுத்து பிரிஸ்பேனில் நவம்பர் மாதம் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in