

புதுடெல்லி: இந்தியாவின் பணியாளர்களில் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கு 30% ஆக உள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்சிக்கு சேவைகள் துறை முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. எனினும் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் இன்னமும் சவால்கள் நீடித்து வருகின்றன. இது உட்கட்டமைப்பு மாற்றம் மெதுவாக நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் 40 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டன. 2011-12-ல் 26.9 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2023-24-ல் சேவை துறை வேலைவாய்ப்பு 29.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இது இன்னும் உலகளாவிய சராசரியான 50 சதவீதத்தை விட பின்தங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.