Published : 07 May 2025 07:03 AM
Last Updated : 07 May 2025 07:03 AM

ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ‘ஷாக்’ கொடுத்த தங்கம்: பவுன் ரூ.72,800-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது. பவுன் ரூ.72,800-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது.

22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320-க்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் விலை குறைந்தது. இம்மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.125 அதிகரித்து ரூ.9,025-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து ரூ.72,200-க்கும் விற்பனையானது.

பின்னர், மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.9,100-க்கும், ஒரு பவுன் ரூ.600 அதிகரித்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.79,416-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.108-ல் இருந்து ரூ.3 அதிகரித்து ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x