தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை இன்றும் (மார்ச் 29) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,880-க்கு விற்பனையாகிறது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்தவகையில், தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்றும் அதிகரித்துள்ளது.

இதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,360-க்கும், பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.66,880-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.9,120-க்கும், பவுன் ரூ.72,960-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.114-ல் இருந்து ரூ.1 குறைந்து ரூ.113-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,13,000 ஆக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in