நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

Published on

நாகை: இந்தியா - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்பச் சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகளால் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா இருநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் சிவகங்கை என்ற பெயரிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து இன்று பிப்.12-ம் தேதி தொடங்கும் என ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலை இயக்கும் சுபம் தனியார் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில். தொழில்நுட்பச் சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இன்று திட்டமிட்டபடி கப்பல் சேவையை தொடங்க இயலவில்லை எனவும், இன்று இயக்கப்படவிருந்த கப்பல் சேவை வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in