ரூ.96,238 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் தொடக்கம்: ஜியோ, ஏர்டெல், ஐடியா பங்கேற்பு

ரூ.96,238 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் தொடக்கம்: ஜியோ, ஏர்டெல், ஐடியா பங்கேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மொபைல் போன் சேவைகளுக் கான 10-வது அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. ரூ.96,238 கோடி அடிப்படை மதிப்பிலான 10,500 மெகா ஹெர்ட்ஸ்அலைக்கறை ஏலம் விடப்பட்டு உள்ளது.

800 மெகா ஹெர்ட்ஸ், 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் என 8 பிரிவுகளில் அலைக்கறை ஏலம் விடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல். வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. அலைக்கற்றையை ஏலம் எடுப்ப தற்காக ரிலையன்ஸ் ஜியோ ரூ.3,000 கோடி, பார்தி ஏர்டெல் ரூ.1,050 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.300 கோடி வைப்புத் தொகை செலுத்தியுள்ளன.

இதன்படி, ஏலம் விடப்பட்டுள்ள மொத்த அலைக்கற்றையில் ரிலை யன்ஸ் ஜியோ 37%, ஏர்டெல் 13%, வோடபோன் ஐடியா 3.7% ஏலம் பெறும் என்று கூறப்படுகிறது.

10-வது ஏலம்: மொபைல் போன் சேவை களுக்கான அலைக்கற்றை ஏலம் முதன்முறையாக 2010-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடைபெறுவது 10-வது ஏலம் ஆகும். கடைசியாக 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் அலைக்கற்றை ஏலம்நடைபெற்றது. அந்த ஏலத்தில் முதன்முறையாக 5ஜி சேவைகளுக்கான ரேடியோ அலைகளும் இடம்பெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in