

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 327 புள்ளிகள் உயர்வடைந்து 65,553 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 19,534 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கின. காலை 10:31 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 249.69 புள்ளிகள் உயர்வடைந்து 65,475.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 88.10 புள்ளிகள் உயர்ந்து 19,524.20 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகள், ஆசிய பங்குச்சந்தைகளின் சாதகமான சூழல்களைத் தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகள் இரண்டு நாள் சரிவில் இருந்து மீண்டு இன்று ஏற்றத்துடன் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்வில் இருந்தன.
பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஜெஎஸ்டபில்யூ பங்குகள் சரிவில் இருந்தன.