6.5 கோடி வருமான வரி ரிட்டர்ன் விண்ணப்பங்கள் தாக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

காலக்கெடு முடிந்துள்ள நிலையில், இதுவரையில் மொத்தம் 6.5 கோடி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 31) வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான காலக்கெடு முடிந்தது. அதன் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், அன்றைய தினத்தில் மட்டும் 36.91 லட்சம் ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக் கல் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in