மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை | சென்செக்ஸ் 65,000, நிஃப்டி 19,000  ஆக உயர்வு

மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை | சென்செக்ஸ் 65,000, நிஃப்டி 19,000  ஆக உயர்வு
Updated on
1 min read

மும்பை: பங்குசந்தையில் காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 433.45 புள்ளிகள் உயர்வடைந்து 65,152.01 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை மீண்டும் புதிய உச்சத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 282.85 புள்ளிகள் உயர்வடைந்து 65,001 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 81.30 புள்ளிகள் உயர்ந்து 19,078 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு தொடங்கியது. காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 433.45 புள்ளிகள் உயர்வடைந்து 65,152.01 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 121.40 புள்ளிகள் உயர்ந்து 19,310.45ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல்களுக்கு மத்தியில் இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளில் அதன் புதிய சாதனை உச்சத்துடன் தொடங்கின. முதல் முறையாக சென்செக்ஸ் 65,000 கடந்தது. நிஃப்டி 19,300 கடந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ஐடிசி, கோடாக் மகேந்திரா பேங்க், இன்போசிஸ் பங்குதள் உயர்வில் இருந்தன.

பவர்கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, இன்டஸ்இன்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி, டிசிஎஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in