சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை: விலை உயர்வால் பொதுமக்கள் கவலை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கனமழை காரணமாக சென்னையில் ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் கனமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் காய்கறிகளின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் தக்காளி மற்றும் சாம்பார் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

இதனிடையே, தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து மேலும் குறைந்துள்ளதால் சென்னையில் இன்று, சில்லறை காய்கறிக் கடைகளில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் மற்ற காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளதால் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in