Published : 29 Oct 2021 01:07 PM
Last Updated : 29 Oct 2021 01:07 PM

கோடநாடு; கனகராஜ் உறவினர் ரமேஷை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உயிரிழந்த கனகராஜின் உறவினர் ரமேஷை 5 நாட்கள் காவலில் விசாரிக்க உதகை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோடநாடு சதித் திட்டம் குறித்துத் தெரிந்திருந்த நிலையில் போலீஸ் விசாரணையின்போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷைத் தனிப்படை போலீஸார் கடந்த 25-ம் தேதி கைது செய்தனர்.

இருவரையும் நவம்பர் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, இருவரும் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனையடுத்து ரமேஷ் இன்று பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரையும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி சஞ்சய் பாபா போலீஸாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, ரமேஷை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x