Last Updated : 11 Sep, 2021 12:32 PM

 

Published : 11 Sep 2021 12:32 PM
Last Updated : 11 Sep 2021 12:32 PM

மதுவுக்கு அடிமையான கணவர்: மனமுடைந்த மனைவி, மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

விருத்தாச்சலம்

விருத்தாச்சலத்தை அடுத்த ஆலடி அருகே கணவர் மதுவுக்கு அடிமையானதால், மனமுடைந்த மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாட்டம், விருத்தாச்சலத்தை அடுத்த பா.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (42). இவரது மனைவி பாக்யலட்சுமி (35). இவர்களுக்கு திவ்யா (17), திவாகர் (15) ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில், தந்தை பாக்யராஜ் அடிக்கடி மது அருந்தி வந்தததோடு, மதுவுக்கு அடிமையானார். இதனால் அவர் சரிவரக் குடும்பத்தை கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் குடும்பத்தை நடத்தத் திணறிய பாக்யலட்சுமி, தனது இரு பிள்ளைகளுடன் முந்திரித் தோப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த ஆலடி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று 3 பேரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் நிகழ்ந்த மூன்று பேர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x