பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 10 பேர் பலி; பலர் காயம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 10 பேர் பலி; பலர் காயம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் கட்டுமானப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். இதில் 6 பேர் சீனர்கள்.

இதுகுறித்து டான் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “வடமேற்கு பாகிஸ்தானில் கட்டுமானப் பணிக்காக மலைப் பகுதியில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். இதில் 6 பேர் சீனர்கள். இந்த விபத்தில் 36 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொஸிந்தான் பகுதியில் பாகிஸ்தான் - சீனா ஒன்றிணைந்து கட்டிவரும் பாலத்தின் கட்டுமானப் பணிக்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது" என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in