Published : 27 Mar 2021 05:42 PM
Last Updated : 27 Mar 2021 05:42 PM

அரசியல் மாற்றம் நமக்குத் தேவை: கமல்

அரசியல் மாற்றம் நமக்குத் தேவை என்று உதகையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கமல் தெரிவித்துள்ளார்.

ஊட்டியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “உதகையில் கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு பெரிய வளர்ச்சியும் ஏற்படவில்லை. ஒரு ஊழல் கட்சியை மாற்றி, இன்னொரு ஊழல் கட்சியைத் தேர்ந்தெடுத்து அமரவைக்க முடியாது.

காய்கறிகளைச் சேமித்து வைக்க குளிர்பதன வசதிகள் செய்து தரப்படவில்லை. தேயிலைத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை. மற்ற கட்சிகள் செய்யவில்லை என்பதைக் கூறுவதை விட நாங்கள் வந்தால் என்ன செய்வோம் என்பதைக் கூறுவதே சிறந்தது.

எங்களது வேட்பாளர்களை நீங்கள் தேர்வு செய்தால் நாங்கள் அனைவருமே சேவகர்கள், தலைவர்கள் அல்ல. அரசியல் மாற்றம் நமக்குத் தேவை. மாற்றத்திற்கான விதையைத் தூவுங்கள். மக்கள் நீதி மய்யத்திற்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளது” என்று கமல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x