பேரவைத் தேர்தலில் புதுச்சேரி பாஜக தலைவர் போட்டி: டெபாசிட் தொகையாக மக்களிடமிருந்து தலா ரூ.1-ஐ உண்டியலில் பெறும் நிர்வாகிகள்

பேரவைத் தேர்தலில் புதுச்சேரி பாஜக தலைவர் போட்டி: டெபாசிட் தொகையாக மக்களிடமிருந்து தலா ரூ.1-ஐ உண்டியலில் பெறும் நிர்வாகிகள்
Updated on
1 min read

பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் தொகையை மக்களிடம் இருந்து உண்டியல் மூலம் தலா ஒரு ரூபாயை அக்கட்சி நிர்வாகிகள் பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், லாஸ்பேட் தொகுதியில் வழக்கமாகப் போட்டியிடுவார். கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நியமன எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்முறையும் லாஸ்பேட் தொகுதியில் சாமிநாதன் போட்டியிட உள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் தொகையை மக்களிடம் இருந்து உண்டியலில் அக்கட்சி நிர்வாகிகள் பெற்று வருகின்றனர்.

இதுபற்றி அவர்களிடம் கேட்டதற்கு, "லாஸ்பேட் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்துக் கிளைகளிலும் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து உண்டியல் மூலம் விருப்பம் உள்ளவர்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே பெறுகிறோம்.

பாஜக தலைவர் செலுத்தும் டெபாசிட் தொகையில் மக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in