

பலன்கள்: இந்த வாரம் ராசியை குரு பகவான் நேரடி ஏழாம் பார்வையாக பார்க்க இருக்கிறார். அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் ஆதிக்கம் குறையும். ஆதலால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மனம் நிம்மதி பெற தியானம் செய்யுங்கள். தொழிலில் உங்களுக்கு அதிக நன்மைகள் ஏற்பட்டு எந்த தடையும் இல்லாமல் தொழில் அபிவிருத்தி இருக்கும்.
நல்ல லாபத்தையும் பார்க்கலாம். முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். சிறு பிரச்சினைகளுக்கு கூட டென்ஷன் ஆவீர்கள். சிலருக்கு அலர்ஜி தொந்தரவுகள் வந்து நீங்கும். உடன் பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான அனைத்தும் வசதிக்கேற்ப செய்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல அனுபவசாலிகளின் அறிவுரைகள் கிடைக்கும்.
சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த பணத் தேவை பூர்த்தியாகும். பெண்களுக்கு அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். ஆடை, ஆபரணங்களை சேர்த்து வைப்பீர்கள். மாமியாருடன் நல் உறவு நீடிக்கும். மாணவர்கள் படிப்பில் ஆவல் உண்டாகும். பெரியோரின் ஆசி உண்டாகும். வீண் விவகாரங்களுக்கு செல்ல வேண்டாம்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.
திருவோணம்: இந்த வாரம் வீடு, மனை வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பண வரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக் கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.
பலன்கள்: இந்த வாரம் தொழிலில் நல்ல முன்னேற்றங்களும் வருமானமும் அதிகரித்து காணப்படும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நல்ல வியாபாரம் நடக்கும். தேங்கிய பொருட்கள் எல்லாம் விற்பனையாகிவிடும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சங்கடங்கள் வந்து விலகும். மனைவியின் உடல் நலத்தில் தகுந்த கவனம் தேவை.
வீடு, மனை, வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். எதிரிகளும் உங்களுக்கு நன்மதிப்பை தருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் இருந்த சிறப்புற்ற செயல் நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள்.
பெண்கள் கை தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு பணியில் ஈடுபட்டு நன்மை அடைவார்கள். அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். மாணவர்கள் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல் தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில் நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் செலவு அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.
சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகப் பெருமானுக்கு அருகம் புல் சாற்றுங்கள்.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் குரு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும். தொழிலைப் பொறுத்தவரை பிரச்சினைகள் வந்தாலும் அது உங்களை பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணாது.
நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். குடும்பத்தில் தந்தை வழி சார்ந்த பங்காளி உறவு என்ற அமைப்பில் வருபவர்கள் உங்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் தருவார்கள் கவனமுடன் செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
திருமண வயதினருக்கு முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள். மாணவர்கள் மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன் கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வ நிலை உயரும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும்.
ரேவதி: இந்த வாரம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் மூலம் திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும்.
பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வந்தால் தொழில் பிரச்சனைகள் தீரும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.