Published : 15 Apr 2021 10:48 AM
Last Updated : 15 Apr 2021 10:48 AM

மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஏப்ரல் 15 முதல் 21ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு மூன்றாம் இடமான மிதுனத்தில் சஞ்சாரம் செய்வது நன்மைகளைத் தரும்.

தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய முன்னேற்றம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு முதலான போட்டிகளில் பங்கேற்கும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: தேவி கருமாரியம்மனை, காஞ்சி காமாட்சி அன்னையை வணங்கி வர எல்லா பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
*************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு (அ.சா) - விரய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சூரியன் புதனுடன் இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.

கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

ராசிக்கு இரண்டில் செவ்வாய் இருப்பதால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு கடன்கள் அடையும். மாணவர்களுக்கு கல்வியைப் பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
திசைகள்: மேற்கு, வ்டமேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 6
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

ராசியில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு (அ.சா) - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக அமைப்பு உள்ளது.

இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 11ல் சூரியன் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று இருப்பதால் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதைச் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்.

பேச்சைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நன்மை தரும்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களைப் படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்
திசைகள்: வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கிவர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x