மெரினாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி: ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மெரினாவில் நடை​பெற்ற பாரம்​பரிய கலை நிகழ்ச்​சியை ஏராள​மானோர் கண்​டு​களித்​தனர். சென்னை மற்​றும் புறநகர் பகுதி மக்​களின் சிறந்த பொழுது​போக்கு இடமாக மெரினா, பெசன்ட்​நகர், திரு​வான்​மியூர், கோவளம் உளிட்ட கடற்​கரை பகு​தி​கள் அமைந்​துள்​ளன.

இந்த கடற்​கரை பகு​தி​களில் மக்​களின் வசதிக்​காக​வும், சிறந்த சுற்​றுச்​சூழலை ஏற்​படுத்​தும் வகை​யிலும் பல்​வேறு கட்​டமைப்பு வசதி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

மெரினா கடற்​கரை​யில், மெரினா நீச்​சல் குளம் அமைந்​துள்ள பகு​தி​யில் உலகத்​தரம் வாய்ந்த நீலக்​கொடி சான்​றுக்​கான மேம்​பாட்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

இந்​நிலை​யில், மக்​களை மகிழ்விக்​க​வும், தமிழகத்​தின் பாரம்​பரியக் கலைகளை அவர்​களிடம் கொண்டு செல்​லும் வகை​யிலும் சென்னை மாநக​ராட்சி சார்​பில், மெரினாவில் நாட்​டுப்​புறக் கலைஞர்​களின் கலை நிகழ்ச்​சிகள் 11 நாட்​கள் நடை​பெற்​றது.

அந்​தவகை​யில், நேற்று நடை​பெற்ற கலை நிகழ்ச்​சிகளில், நையாண்டி மேளம், கானா பாடல்​கள், கரகாட்​டம், பறை ஆட்​டம், பல்​சுவை கலை நிகழ்ச்​சிகள், லேசர் நடனம் ஆகியவை இடம் பெற்​றன.

இந்த கலை நிகழ்ச்​சிகளில் 80-க்​கும் மேற்​பட்ட கலைஞர்​கள் பங்​கேற்​றனர். கலை நிகழ்ச்​சிகளை மக்​கள் ஆர்​வத்​துடன்​ கண்​டு​களித்​தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
செங்கல்பட்டு: உடல் உறுப்பு தானம் செய்த 150 ஆட்டோ ஓட்டுநர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in