ஷண்முகப்ரியா வர்ணத்தில் பிரகாசித்த திருஷ்யா

ஷண்முகப்ரியா வர்ணத்தில் பிரகாசித்த திருஷ்யா
Updated on
1 min read

சென்னை: ​மார்​கழி இசை​விழா​வின் ஒரு பகு​தி​யாக தியாகபிரம்ம கானசபா சார்​பில், வாணிம​காலில் எஸ்​. திருஷ்யாவின் பரத​நாட்​டிய நிகழ்ச்சி நடை​பெற்​றது. ‘எனக்கு வேண்​டும் வரங்​களை அளிப்​பாய்’ என்று தொடங்​கும் கணபதி பாடலுடன் நிகழ்ச்சி தொடங்​கியது.

அடுத்​த​தாக மதுரை ஆர்​.​முரளிதரனின் ஷண்​முகப்​ரியா ராகப் பாடல் (சுற்றி வரு​குது வரு​குது வரு​குது வேல்) தொடர்ந்​தது. முரு​கப் பெரு​மானின் பெரு​மை​கள், வேலின் சிறப்​பு​களை விளக்​கும் இந்​தப் பாடலுக்கு சிறந்த அபிந​யங்​களு​டன் நடன​மாடி​னார் திருஷ்யா.

இதைத் தொடர்ந்து, ஈசனின் திருநடனத்​தைப் போற்​றும் வித​மாக தேசி​யதோடி ராகத்​தில் அமைந்த கோபால​கிருஷ்ண பார​தி​யின் பாடலுக்கு நடன​மாடி​னார். ‘தா தை என்​றாடு​வார் தத்​தித்தை என்​றாடு​வார்’ என்ற பாடல் மூலம் சிவபெரு​மானின் கம்​பீரத்​தை​யும், கோபால​கிருஷ்ண பார​தி​யின் பக்​தி​யை​யும் கண் முன்னே கொண்டு வந்​தார் திருஷ்யா.

நடன நிகழ்ச்​சி​யில் முதன்​மை​யானது வர்​ணம். இதற்கு வயலின் மேதை லால்​குடி ஜெய​ராமனின் ஷண்​முகப்​ரியா ராகத்​தில் அமைந்த பத வர்​ணத்தை தேர்ந்​தெடுத்​தார் திருஷ்யா. ‘தேவர் முனிவர் தொழும் பாதம் ஜெகன்​நாதம்’ எனத் தொடங்​கும் வர்​ணம்,, திரு​மலை வேங்​கட​வனின் குணங்​களை விளக்​கு​கிறது.

முக்​தா​யிஸ்​வரங்​கள், சிட்​டைஸ்​வரங்​களில் தனது அபிந​யங்​களில் மூலம் வேங்​கட​வனின் பல ரூபங்​களை​யும், நவரசங்​களை​யும் வெளிக்​கொணர்ந்​தார் திருஷ்யா. அனை​வருக்​கும் அனைத்து செல்​வங்​களை​யும் அளிப்​பாய் என்று திரு​மலை​ வாசனை வேண்டி வர்​ணத்தை நிறைவு செய்​தார் திருஷ்யா.

அடுத்​த​தாக, துரித கதி​யில் அமைந்த பட்​ட​ணம் சுப்​பிரமணிய ஐயரின் கதனகு தூகல ராகத்​தில் அமைந்த ‘ரகு​ வம்ச சுதாம்​பூதி சந்​திர  ராம் ராஜ ராஜேஸ்​வ​ரா’ பாடலுக்கு நடன​மாடி​னார். ‘கௌரி நாயக வன சுப​தாயக கமலா​காந்தா சாய​கா’ எனத் தொடங்​கும் கானடா ராக மைசூர் வாசுதே​வாச்​சா​ரி​யாரின் தில்​லா​னா​வுடன் நிகழ்ச்​சியை நிறைவு செய்​தார் திருஷ்யா.

திருஷ்யாவுக்கு உறு​துணை​யாக குரு சைலஜா (நட்​டு​வாங்​கம்), கிருத்​திகா (குரலிசை), வெங்​கட் (மிருதங்​கம்), சுகன்யா (வயலின்), யோகேஷ்வரன் (புல்​லாங்​குழல்), பாப்​பூரி (ஒப்​பனை) இருந்​து, நிகழ்ச்​சியை மெரு​கேறச் செய்​தனர்.

தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு பயிலும் திருஷ்யா, கடந்த 7 ஆண்​டு​களாக நடனகுரு சைலஜா​விடம் பரத​நாட்​டி​யம் பயின்று வரு​கிறார். சைல சுதா நாட்​டிய அகாட​மி​யின் நிறு​வன​ராக உள்ள சைலஜா, சங்​கீத நாடக அகாட​மி, கலை​மாமணி விருதுகளைப்​ பெற்​றுள்​ளார்​.

ஷண்முகப்ரியா வர்ணத்தில் பிரகாசித்த திருஷ்யா
‘கிக்’ தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in