மிருதங்க மேதைக்கு அரங்கம் நிறைந்த பாராட்டு | இசை அரங்கம்

உமையாள்புரம் சிவராமன், அஷ்வத் நாராயணன்.

உமையாள்புரம் சிவராமன், அஷ்வத் நாராயணன்.

Updated on
1 min read

சென்னை: பாரம்பரியமிக்க சபாக்​களில் ஒன்று சென்னை மியூசிக் அகாட​மி. இதன் மேடை​யில் ஏறு​வதை அரிய வாய்ப்​பாக, ஆகப்​பெரும் பாக்​கிய​மாக கருதுகின்​றனர் இசைக் கலைஞர்​கள். அதற்கு ஏற்ற வகை​யில் பயிற்சி பெற்று தங்​களை மெரு​கேற்​றிக் கொள்​கின்​றனர்.

அந்த வகை​யில், மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா​வில், வளரும் வித்​வான் அஷ்வத் நாராயணனின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. கச்​சேரி​யில் அவருக்கு பக்​கபல​மாக பி.யூ.கணேஷ் பிர​சாத் (வயலின்), ‘பத்​ம​விபூஷண்’ உமை​யாள்​புரம் கே.சிவ​ராமன் (மிருதங்​கம்), பி.எஸ்​.புருஷோத்​தமன் (கஞ்​சி​ரா) இருந்​தனர்.

‘நின்னு கோரி’ எனத் தொடங்​கும் வசந்தா ராக வர்​ணத்​துடன் நிகழ்ச்​சி​யைத் தொடங்​கி​னார் அஷ்வத். அடுத்​த​தாக ஆரபி ராக திருப்​பாவை (ஓங்கி உலகளந்த உத்​தமன்), அடாணா ராகதியாக​ராஜர் கீர்த்​தனை (அனுபமகுணாம்​பு​தி), கன்னட ராக முத்​துசு​வாமி தீட்​சிதர் க்ருதி ( மாத்​ரு பூதம்), கேதார கௌளை ராக சியாமா சாஸ்​திரி சாஹித்​யம் (பராகேல) ஆகிய​வற்​றைப் பாடி​னார்.

கச்​சேரி​யின் பிர​தான ராக​மாக காபி அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பிறகு, தியாக​ராஜ சுவாமிகளின் ‘இந்த சௌக்​கியமணி’ கீர்த்​தனையைப் பாடி​னார். ‘ஸ்​வர​ராக லய சுதா​ரஸ’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார்.

தனி ஆவர்த்​தனத்​தில் உமை​யாள்​புரம் சிவ​ராமனும், புருஷோத்​தமனும் தங்​கள் சௌக்​கிய​மான வாசிப்​பில் அனை​வரை​யும் மெய்சிலிர்க்க வைத்​தனர். ரசிகர்​கள் அனை​வரும் எழுந்து நின்​று, 10 நிமிடங்​களுக்​கும் மேலாக கைதட்டி தங்​கள் மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர்.

பூர்வி​கல்​யாணி ராகத்​தில் அமைந்த, ‘காணக் கிடைக்​குமோ சபேசன் தரிசனம் கண்​டால் கலி தீரு​மோ’ என்ற பல்​ல​வியை ராகம் தானம் பல்​லவிக்கு தேர்ந்​தெடுத்​தார் அஷ்வத். பாடகரை நிழல்​போல வயலினில் தொடந்த கணேஷ்பிர​சாத், ராக​மாலிகை ஸ்வரங்​களில் (ஆனந்த பைர​வி, கேதா​ரம், சிந்​துபைர​வி) முத்​திரை பதித்​தார்.

புரந்​தர​தாசரின் ‘நரஜென்ம பந்​தாக’, தரு​மபுரி சுப்​ப​ராய ஐயரின் ‘ஸ்​மரசுந்​த​ராங்​குனி’ – பரஸ் ராக ஜாவளி, தில்​லா​னா​வுடன் கச்​சேரியை அஷ்வத் நிறைவு செய்​தார். தனது 4-வது வயதில் இருந்து ஜெயலட்​சுமி சுந்​தர ​ராஜனிடம் இசை பயின்ற அஷ்வத், பின்​னர் பாலக்​காடு கே.​வி.​நா​ராயணசு​வாமி, பத்மா நாராயணசு​வாமி​யிடம் இசை பயின்​றார்.

எண்​ணற்ற விருதுகளைப் பெற்ற இவர், தற்​போது பல இசை நிகழ்ச்​சிகளை நடத்தி வரு​கிறார். அதே​போல, தனது 10-வது வயதில் இருந்து மிருதங்​கம் வாசித்​துக் கொண்​டிருக்​கும் மிருதங்க மேதை உமை​யாள்​புரம் கே.சிவ​ராமன், இளம் வித்​வான்​களை ஊக்​கு​வித்​து, உற்​சாகப்​படுத்​தும் வகை​யில் அவர்​களுக்கு மிருதங்​கம் வாசித்து வரு​கிறார். “வயது என்​பது வெறும் எண். நாதம்​தான் என் உயிர் மூச்​சு” என்று அவர் அடிக்​கடி கூறு​வது வழக்​கம். அவர் சமீபத்​தில் தனது 90-வது பிறந்​த​நாளைக் கொண்​டாடியது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>உமையாள்புரம் சிவராமன், அஷ்வத் நாராயணன்.</p></div>
‘வசந்த பைரவி’யில் ஜொலித்த வாணி ராமமூர்த்தி | இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in