கான மழை பொழிந்த ஆதித்ய நாராயணன் | இசை அரங்கம்

கான மழை பொழிந்த ஆதித்ய நாராயணன் | இசை அரங்கம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மியூசிக் அகாடமி இசை​விழாவுக்கு என்று ஒரு தனி மதிப்பு உண்​டு. விருதுகளில் சிறந்​த​தாக மியூசிக் அகாடமி வழங்​கும் ‘சங்​கீத கலாநி​தி’ விருது போற்​றப்​படு​கிறது. இந்த சபை​யில் கச்​சேரி நிகழ்த்​து​வது, சாதனை​யாகவே பார்க்​கப்​படு​கிறது.

மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா​வில், வித்​வான் ஆதித்ய நாராயணனின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. இவர் வித்​வான் டி.எம்.கிருஷ்ணா​விட​மும், விதூஷி சுகுணா வரதாச்​சா​ரி​யிட​மும் இசை பயின்று வரு​கிறார். சிறு​வயது முதலே பல்​வேறு போட்​டிகளில் பங்​கேற்​று,பல விருதுகளைப் பெற்​றுள்​ளார்.

கச்​சேரி​யில் அவருக்கு பக்​கபல​மாக வி.எஸ்​. கோகுல் (வயலின்), எல் சுதர்​ஷன் ஸ்ரீநி​வாஸ் (மிருதங்​கம்), சுனாத் அனூர் (கஞ்​சி​ரா) இருந்​தனர். ​தி​யாக​ராஜ சுவாமி​யின் கௌளிபந்து கீர்த்​தனை​யுடன் (தெர​தியக ராதா) கச்சேரியைத் தொடங்​கி​னார் ஆதித்ய நாராயணன். அடுத்​த​படி​யாக முத்​துசு​வாமி தீட்​சிதரின் ஹமீர் கல்​யாணி ராகத்​தில் அமைந்த க்ருதி ‘பரிமள ரங்​க​நாதம் பஜேஹம்’ பாடி, ரங்​கனை வணங்​கி​னார்.

இந்த க்ரு​தி​யில் திருமால், தசாவ​தா​ரம் எடுத்​தவராக​வும், தாமரை போன்ற கண்​களை உடைய​வ​ராக​வும் பக்​தர்​களைக் காத்​தருள்​பவ​ராக​வும் போற்​றப்​படு​கிறார்.

கச்சேரியை மிளிர வைத்த ராகங்கள்: கச்​சேரி​யின் பிர​தான ராக​மாக தோடி அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனை​யுடன் தொடங்​கி, தியாக​ராஜ சுவாமி​யின் ‘எந்​துகு தயராது​ரா’ என்ற கீர்த்​தனையை, நிர​வல், ஸ்வரக் கோர்​வை​களு​டன் பாடி நிறைவு செய்​தார். தனி ஆவர்த்​தனத்​தில் சுதர்​ஷன் ஸ்ரீநி​வாஸும் சுனாத் அனூரும் போட்டி போட்​டுக் கொண்டு தங்​கள் திறமையை வெளிப்​படுத்​தினர்.

காம்​போஜி ராகத்​தில் அமைந்த ராகம் தானம் பல்​ல​வி, கச்​சேரியை உயரத்​துக்கு கொண்டு சென்​றது. திஸ்ர திரிபுட தாளம் 4 களை​யில் அமைந்த ‘ஆனந்த நடனம் ஆடி​னார் ததிமி ததிம் என கனகசபை​யில்’ பல்​ல​வியை மிக எளி​தாகக் கையாண்​டார் ஆதித்ய நாராயணன்.

இந்த தாளத்​துக்கு நல்ல பயிற்சி வேண்​டும். பாடகருக்கு இணை​யாக தனது வயலினில், ஈடு கொடுத்​தார் கோகுல். த்ரி​காலத்​தில் (விளம்ப, மத்திய, துரித) பல்​ல​வியை இரு​வரும் வெளிப்​படுத்​திய விதம் அரு​மை.

கூடு​தலாக இந்த பல்​ல​வியை பூர்வி​கல்​யாணி மற்​றும் குந்​தல​வ​ராளி ராகங்​களில் பாடியது கச்​சேரியை மிளிர வைத்​தது. ‘ஏல​ரா​தாயனே காமினி’ என்ற பைரவி ராக சின்​னய்​​யா​வின்​ ஜாவளி​யுடன்​ கச்​சேரியை நிறைவு செய்​​தார்​ ஆதித்​ய ​நா​ராயணன்​.

கான மழை பொழிந்த ஆதித்ய நாராயணன் | இசை அரங்கம்
இசைமழையில் நனையவைத்த அபிஷேக் ரவிசங்கர் | இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in