இசைமழையில் நனையவைத்த அபிஷேக் ரவிசங்கர் | இசை அரங்கம்

இசைமழையில் நனையவைத்த அபிஷேக் ரவிசங்கர் | இசை அரங்கம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா நிகழ்ச்​சிகள் தொடங்​கி​விட்​டன. சென்​னை​யில் ஒவ்​வொரு சபா​விலும் இசை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றாலும், மியூசிக் அகாட​மிக்கு என்று ஒரு தனி பெயர், முத்​திரை உண்​டு. நூற்​றாண்டை நோக்கி பயணிக்​கும் இந்த சபை​யில், இசை கச்​சேரி நிகழ்த்​து​வதை, கலைஞர்​கள் பெரும் சாதனை​யாக கருது​வர்.

பல தேர்​வு​களைக் கடந்த பின்​னரே, ஒரு​வர் மியூசிக் அகாடமி மேடை​யில் பாட அனு​ம​திக்​கப்​படு​வதுண்​டு. வளர்ந்து வரும் இசை கலைஞர் அபிஷேக் ரவிசங்​கரின் கச்​சேரி, மியூசிக் அகாட​மி​யில் நடை​பெற்​றது.

முதலில் தன் தாயிடம் இசை கற்கத் தொடங்கிய அபிஷேக் ரவிசங்கர், இசைமேதை பி.எஸ்​.​நா​ராயணசு​வாமி​யின் சீட​ரான ஏ.எஸ்​.​முரளி​யிடம் இசைபயின்​று, தன்னை மெரு​கேற்​றிக் கொண்​டார். கச்​சேரி​யில் அவருக்கு பக்​கபல​மாக பார்​கவ் டும்​கூர் (வயலின்), ஸ்ரீ ராம் சீனி​வாசன் (மிருதங்​கம்) இருந்​தனர்.

ஏரா​நாபை எனத் தொடங்​கும் பட்​ட​ணம் சுப்​பிரமணிய ஐயரின் தோடி ராக வர்​ணத்​துடன் கச்​சேரியைத் தொடங்​கி​னார் அபிஷேக் ரவிசங்​கர். அடுத்​த​தாக மார்​கழி மாதத்​தின் முதல் நாள் திருப்​பாவையை (மார்​கழித்திங்​கள் - நாட்டை ராகம்) பாடி​னார். அவர் பாடிய ஒவ்​வொரு வரியிலும் நிழல் போல வயலினில் பார்கவ் தொடர்ந்து கொண்டு வந்தார்.

கல்​யாணி ராகத்​தில் சிறிய ஆலாபனை செய்​து​விட்​டு, முத்​துசுவாமி தீட்​சிதரின், ‘பஜரே ரே சித்த’ என்ற க்ரு​தியை எடுத்​துக் கொண்​டார். சரணத்​தில் வரும் ‘தேவீம் சக்தி பீஜோத்பவ மாத்ரு கார்ண ஸரீரிணீம்’என்ற வரியை நிர​வல் செய்​தார்.

இந்​தப் பாடலில் பாலாம்​பிகா பக்தர்​களுக்கு கல்ப விருட்​சம் போல் இருப்​ப​தாக போற்​றப்​படு​கிறாள். அதன் பின்​னர் 44-வது மேளகர்த்தா பவப்​ரியா ராகத்​தில் அமைந்த தியாக​ராஜ கீர்த்​தனையை (ஸ்ரீகாந்த நீயெட) பாடி​விட்​டு, பிர​தான ராக​மாக கரஹரப்​ரி​யா​வில் அமைந்த தியாக​ராஜ கீர்த்​தனையை தேர்ந்​தெடுத்​தார் அபிஷேக்.

விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பின் பிரபல​மான ‘சக்​க​னி​ராஜ மார்க்​க​மு’ கீர்த்​தனைத் தொடங்​கி, அதில் ‘கண்​டிகி சுந்​தர’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, அதற்கு ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார். ஸ்ரீராம் சீனி​வாசன் தனி ஆவர்த்​தனத்​தில் மிளிர்ந்​தார்.

மோகன ராகத்​தில் அமைந்த ஸ்வா​தித் திரு​நாளின் கீர்த்​தனை, அருணகிரி​நாதர் திருப்​பு​கழுடன் கச்​சேரி நிறைவு பெற்​றது. அபிஷேக் ரவிசங்​கர் பாடிய​போது, ஆங்​காங்கே செம்​மங்​குடி பாணி தென்​பட்​டது. செம்​மங்​குடி சீனி​வாசய்​யரிடம் இசை பயின்​றவர் பி.எஸ்​.​நா​ராயண​சுவாமி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இசைமழையில் நனையவைத்த அபிஷேக் ரவிசங்கர் | இசை அரங்கம்
SIR | செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in