அரசியல்

ராமதாஸ் + திருமா சாத்தியமா? - திமுக கூட்டணிப் பேச்சு அப்டேட்

செய்திப்பிரிவு

அ​தி​முக கூட்​ட​ணி​யில் அன்​புமணி இடம்​பிடித்​து​விட்​ட​தால் திமுகவுடன் ராமதாஸ் கூட்​டணி பேச்​சு​வார்த்​தையை தொடங்கி இருக்​கி​றார். இதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முறைத்​துக் கொள்​ளாமல் இருக்க, அந்தக் கட்​சி​யை​யும் சமா​தானம் செய்​யும் வேலை​கள் நடப்ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

பாமக​வில் உள்ள 5 எம்​எல்​ஏ-க்​களில் ஜி.கே.மணி​யும் இரா.அருளும் ராம​தாஸுக்கு ஆதர​வாக​வும், எஸ்.பி.வெங்கடேஸ்​வரன், எஸ்​.சதாசிவம், சி.சிவக்​கு​மார் ஆகி​யோர் அன்​புமணிக்கு ஆதர​வாக​வும் நிற்​கி​றார்​கள். கட்​சி​யில் இருந்து அன்​புமணி​யின் ஆதர​வாளர்​களை ராமதாஸ் நீக்​கு​வதும், ராம​தாஸ் ஆதர​வாளர்​களை அன்புமணி நீக்​கு​வதும் தொடர்ந்து நடை​பெறுகிறது.

இதற்​கிடை​யில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவராக அன்​புமணியே இருப்​பார் என்று தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. மாம்​பழம் சின்​னத்​தை​யும் அன்புமணி தரப்​புக்கே ஒதுக்​கி​யுள்​ளது. இதை ஆட்சேபித்துள்ள ராம​தாஸ், அன்​புமணி முறை​கேட்​டில் ஈடுபட்டுள்​ள​தாக தேர்​தல் ஆணை​யத்​தி​லும் காவல் துறையிலும் புகார் அளித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், திடீரென அண்​மை​யில் அதி​முக பொதுச் ​செய​லா​ளர் பழனி​சாமியை சந்​தித்த அன்​புமணி, கூட்டணியை உறுதி செய்​தார். அதி​முக கூட்​ட​ணி​யில் பாமக-வுக்கு 18 தொகு​தி​கள் மற்​றும் ஒரு ராஜ்யசபா சீட் தரு​வதற்கு அதி​முக ஒப்​புக் கொண்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதையடுத்​து, ராம​தாஸ் தரப்பு திமுக-​விடம் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. ஆனால், ராம​தாஸை திமுக கூட்​ட​ணி​யில் சேர்த்​தால், கூட்ட​ணியை விட்டு வெளி​யேறும் முடி​வில் இருக்​கிறது விசிக.

இதனால் ராம​தாஸை திமுக கூட்​ட​ணி​யில் சேர்க்​க​வும், விசிக-வை கூட்​ட​ணி​யில் தக்க வைக்​க​வும் வடமாவட்ட மூத்த அமைச்​சர் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளார். அதேசம​யம் 10 தொகு​தி​களுக்கு மேல் ராம​தாஸ் கேட்​ப​தால் கூட்​டணி பேச்​சு​வார்த்​தை​யில் இழுபறி நீடிப்பதாக​வும் சொல்லப்படுகிறது. இது தொடர்​பாக ராம​தாஸ் தரப்பினரிடம் கேட்டபோது, “பாமக-​வின் ஆணிவே​ரான வன்​னியர் சங்​கம் முழு​வதும் ராம​தாஸ் கட்டுப்பாட்டில் தான் உள்​ளது. அதனால், இந்த தேர்​தலில் ராம​தாஸ் யார் என்​பதை மகன் அன்​புமணிக்கு நன்கு புரிய​வைப்​பார். அதி​முக கூட்​ட​ணி​யில் அன்​புமணி இருப்​ப​தால், அங்கு ராமதாஸ் செல்ல வாய்ப்பு இல்​லை.

திமுக-​வா, தவெக-வா என நிர்​வாகி​களிடம் கருத்​துக் கேட்ட​போது பெரும்​பாலான​வர்​கள் திமுக கூட்​ட​ணிக்​குச் சென்​றால் வெற்றி வாய்ப்பு அதி​கம் என்று தெரி​வித்​தனர். அதனால், திமுக-வுடன் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது. எத்​தனை தொகு​தி​கள் என்​பது இன்​னும் உறுதியாக​வில்​லை. ரா​ம​தாஸ் மகளும், கட்​சி​யின் செயல் தலை​வ​ரு​மான ஸ்ரீகாந்​தி, ஜி.கே.மணி. இரா.அருள், திருக்கச்​சூர்​ ஆறு​முகம்​ உள்​ளிட்​டோர்​ தேர்​தலில்​ போட்டியிட​வுள்​ளனர்​” என்​றனர்​ ராமதாஸ் தரப்பினர். - சி.கண்ணன்

SCROLL FOR NEXT