தமிழகத்தில் தவெக தலைவர் விஜய்யை முன்னிறுத்தி காங்கிரஸ் ஆடும் அரசியல் ஆட்டம், தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் ஆகிய இரு வேறு கொள்கைகள் மட்டுமே பிரதானமாக உள்ளன. மற்ற கட்சிகளால் இவற்றுக்கு முன்னால் நிற்க முடியாது. இறுதியில் காங்கிரஸ்தான் பாசிச சக்திகளை வீழ்த்தும்” என மற்ற கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தொடங்கியுள்ள இந்த ‘விஜய் - காங்கிரஸ்’ புதிய அரசியல் அத்தியாயம், தேசிய அரசியலின் சதுரங்க ஆட்டத்தையே மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.