அரசியல்

யாருக்கு எத்தனை தொகுதிகள்? | அமித் ஷா - இபிஎஸ் பேசியது என்ன?

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வேட்​புமனு தாக்​கல் 30-ம் தேதி தொடங்க உள்​ளது. அதற்கு இன்​னும் 10 நாட்​களே இருப்​ப​தால், கடைசி நேர அவசரத்தை தவிர்க்​கும் வித​மாக, தொகு​திப் பங்​கீட்டை விரைந்து இறுதி செய்ய வேண்​டும் என்று பழனி​சாமி​யிடம் பாஜக தலைமை வலியுறுத்தியுள்​ளது. இதன் தொடர்ச்​சி​யாக, மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தமிழகம் வந்​து, தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி, தொகு​திப் பங்​கீட்டை இறுதி செய்​வ​தாக இருந்​தது.

பியூஷ் கோயல், ஏற்​கெனவே இரு​முறை சென்​னைக்கு வந்து பழனி​சாமி​யுடன் விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார். கூட்​டணி கட்​சித் தலை​வர்​களை​யும் அவர் சந்​தித்​துப் பேசி​னார். இருப்​பினும், பாஜக கேட்ட தொகு​தி​களின் எண்​ணிக்​கைக்​கும், அதி​முக ஒதுக்க முன்​வந்த இடங்​களுக்​கும் இடையே உடன்​பாடு எட்டப்ப​டா​மல் இருந்​தது. குறிப்​பாக, பாஜக தரப்​பில் கவுர​வ​மான எண்​ணிக்​கை​யில் தொகு​தி​கள் எதிர்​பார்க்​கப்​பட்​டன. தனது கூட்​டணி கட்​சிகளை​யும் அரவணைத்துச் செல்​லும் வகை​யில் பாஜக கூடு​தல் இடங்​களை வலி​யுறுத்தி வரு​கிறது. குறிப்​பாக, கன்​னி​யாகுமரி, நெல்​லை, கோவை, திருப்​பூர், ஈரோடு, சேலம் மற்​றும் சென்னை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் தங்​களுக்கு செல்​வாக்​குள்ள தொகு​தி​களைக் குறி​வைத்து பாஜக களம் இறங்​கி​யுள்​ளது.

          

இந்​நிலை​யில், தொகு​திப் பங்​கீட்​டுச் சிக்​கலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க பாஜக மேலிடப் பொறுப்​பாளர் பியூஷ் கோயல் வரு​வ​தாக கூறப்பட்​டது. அவர் பழனி​சாமி​யுடன் இறு​திச்​ சுற்​றுப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதும் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கான தொகு​தி​கள் அதிகாரப்பூர்வ​மாக அறிவிக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது. இந்த நிலை​யில், பியூஷ் கோயலின் தமிழக பயணம் கடைசி நேரத்​தில் ரத்து செய்​யப்​பட்​டது.

இதற்​கிடையே, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரனும் கூடு​தல் தொகு​தி​கள் கேட்டு வரு​வ​தாக அதி​முக வட்​டாரங்​கள் தெரிவித்​தன. இந்தச் சூழலில், மத்​திய அமைச்​சர் அமித் ஷாவை சந்​தித்து தொகு​திப் பங்​கீட்டை இறுதி செய்​வதற்​காக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வியாழக்கிழமை காலை டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். இரவு அமித் ஷாவை சந்​தித்​து, தொகு​திப் பங்​கீடு தொடர்​பாக தீவிர ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது, பாஜக 30 தொகு​தி​கள் கேட்ட நிலை​யில், 25 தொகு​தி​களை ஒதுக்​கு​வ​தாக பழனி​சாமி தெரி​வித்​தத​தாக கூறப்​படு​கிறது. அதே​போல, 30 கேட்ட பாமக​வுக்கு 22 தொகு​தி​கள், 10 கேட்ட அமமுக​வுக்கு 6 தொகு​தி​கள், 12 கேட்ட தமாகா​வுக்கு 3 தொகு​தி​கள் ஒதுக்​கு​வ​தாக​வும் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். பாஜக​வுக்கு கூடு​தல் தொகு​தி​கள் ஒதுக்க வாய்ப்பு இல்லை என்​ப​தில் அவர் உறு​தி​யாக இருந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. பின்​னர், தீவிர ஆலோ​சனைக்​குப் பிறகு, தொகு​திப் பங்​கீட்டை அமித் ஷா, பழனி​சாமி இரு​வரும் சுமுக​மாக இறுதி செய்ததாக தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்​சி​யாக, கூட்​ட​ணிக் கட்​சிகளை அழைத்​துப் பேசி, ஓரிரு நாளில் தொகு​திப் பங்​கீட்டை இறுதி செய்ய பழனி​சாமி திட்டமிட்டுள்​ளதாகவும் கூறப்படுகிறது. டெல்​லி​யில் அமித் ஷா உடனான சந்​திப்​பின்​போது, திமுக அமைச்​சர் கே.என்​.நேரு, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி ஆகியோர் மீதான அமலாக்​கத் துறை நடவடிக்​கை​யைத் தீவிரப்​படுத்​து​வது குறித்து பழனி​சாமி வலி​யுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

தவெக தலை​வர் விஜய்க்கு மக்​கள் மத்​தி​யில் உள்ள செல்​வாக்​கு, தவெக உடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்​பு​கள் குறித்து பழனிசாமியிடம் அமித் ஷா ஆலோ​சனை நடத்​தி​ய​தாக​வும் தகவல் வெளி​யானது. இதற்​கிடையே, கூடு​தல் தொகு​தி​கள் கேட்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலை​வர் அன்​புமணி மற்றும் தமிழக பாஜக தலை​வர்​ நயி​னார்​ நாகேந்​திரன்​ ஆகியோ​ரும்​ டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT