அரசியல்

திமுக கூட்டணி ‘சீட்’ சிக்கல்... கம்யூனிஸ்ட்கள் கடும் அதிருப்தியா?

செய்திப்பிரிவு

திமுக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு விவ​காரம் பெரும் விவாதப் பொருளாக மாறி​யுள்​ளது. திமுக​வின் நீண்​ட​கால தோழமை கட்சிகளான இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கட்​சிகள் 2021 சட்​டப்​பேரவை தேர்​தலின்போது திமுக கூட்​ட​ணி​யில் தலா 6 இடங்​களில் போட்​டி​யிட்​டு, தலா 2 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றன. அதேசமயம் 2024 மக்​கள​வைத் தேர்​தலில் இரண்டு கட்சிகளுமே தாங்​கள் போட்​டி​யிட்ட தலா 2 இடங்​களி​லும் வெற்றி வாகை சூடின. இதை முன்​னிறுத்​தி, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் தலா 10 தொகு​தி​களை கேட்​டுப் பெற வேண்​டும் என்ற நிலைப்​பாட்​டில் கம்யூனிஸ்ட் கட்​சிகள் இருந்​தன.

இந்த நிலை​யில், திமுக கூட்​ட​ணி​யில் தற்​போது தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகள் இணைந்​துள்​ளன. இது தொகு​திப் பங்கீட்​டில் புதிய திருப்பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. புதிய கட்​சிகளின் வரு​கை​யாலும், கடந்த முறை கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் வெற்றி சதவீதம் குறை​வாக இருந்​ததைக் சுட்டிக்​காட்​டி​யும், இந்த முறை இரண்டு கம்​யூனிஸ்ட் கட்சிகளுக்​கும் தலா 5 தொகு​தி​கள் மட்​டுமே ஒதுக்க முடியும் என திமுக தலைமை நடத்​திய மறை​முக பேச்​சு​வார்த்​தை​யின்போது தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

          

“கூட்​ட​ணி​யில் கூடு​தல் கட்​சிகள் இணைந்​துள்​ள​தால் இடங்​களை பகிர்ந்து கொள்​வ​தில் சிக்​கல் உள்​ளது, எனவே 5 தொகு​தி​களுக்கு உடன்​படுங்​கள்” என திமுக தரப்​பில் வைக்​கப்​பட்ட கோரிக்​கை, கம்​யூனிஸ்ட் நிர்வாகிகளிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த நிலை​யில், திமுக-வுடன் அதி​காரபூர்​வ​மாக பேச்​சு​வார்த்தை நடத்த இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி தனது உயர்​நிலைக் குழுவை அறி​வித்​தது.

கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலைமை​யில், முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் இரா.முத்தரசன், கே.சுப்​ப​ராயன் எம்​.பி மற்​றும் கோ.பழனிசாமி ஆகியோர் அடங்​கிய இக்​குழு, வரும் பிப்ரவரி 27-ம் தேதி திமுக-வுடன் முதற்​கட்​டப் பேச்சுவார்த்தை​யில் ஈடுபட உள்​ளது. இதனைத் தொடர்ந்து, பிப்​ர​வரி 28-ம் தேதி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யும் திமுக-வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தவுள்​ளது. கூடு​தல் தொகு​தி​களை எதிர்​பார்த்​திருக்​கும் கம்யூனிஸ்ட்கள், தாங்​கள் ஏற்​கெனவே போட்​டி​யிட்ட தொகு​தி​களை விட குறை​வாக தி​முக கொடுக்க முன்வந்தால் அதை ஏற்​றுக் கொள்​வார்​களா என்​ப​தை பொறுத்​திருந்​து பார்க்​கவேண்​டும்​.

SCROLL FOR NEXT