பொது

இந்தியாவில் 16 வயது வரை சோஷியல் மீடியா தடையா?

செய்திப்பிரிவு

இந்​தி​யா​வில் 16 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர்​கள் சமூக வலை​தளங்​களைப் பயன்​படுத்​து​வதற்​குப் பல்​வேறு கட்டுப்​பாடு​களை விதிப்​பது குறித்து மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது. இதுகுறித்து மத்​திய தகவல் தொழில்நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறும்போது, “வயது அடிப்​படை​யில் கட்​டுப்​பாடு கொண்டு வரு​வது குறித்​து பல்​வேறு சமூக வலைதள நிறுவனங்​களு​டன் அரசு ஆலோ​சனை​களை நடத்தி வருகிறது.

ஒவ்​வொரு நாட்​டின் கலா​சார சூழலை​யும் பன்​னாட்டு நிறுவனங்​கள் புரிந்​து​கொள்ள வேண்​டும். டீப்ஃபேக் காணொலிகளைக் கண்​டறிந்த 3 மணி நேரத்​திற்​குள் நீக்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட புதிய விதி​கள் ஏற்​கெனவே அமலில் உள்​ளன. தற்​போது ‘டீப்ஃபேக்' எனப்​படும் போலி காணொலிகள் மற்​றும் வயதுக் கட்​டுப்​பாடு​கள் குறித்து விரி​வான பேச்​சு​வார்த்தை நடந்து வருகிறது” என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறி​னார்.

          

உயர​தி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “இப்​போதுள்ள சூழ்​நிலை​யில் சிறு​வர்​களுக்கு சமூக வலைதள அனு​மதி அவசியமா என்​பது குறித்து மிகுந்த கவனத்​துடன் முடிவெடுக்க வேண்​டி​யுள்​ளது. ஆஸ்​திரேலி​யா​வில் பின்பற்றப்​படும் நடை​முறை​களை அரசு ஆய்வு செய்து வரு​கிறது. எனினும், ஆஸ்​திரேலி​யா​வைப் போல 16 வயதுக்கு உட்​பட்​டோருக்கு முழு​மை​யான தடை விதிக்​கும் எண்​ணம் எது​வும் மத்​திய அரசிடம் தற்​போதைக்கு இல்லை. 2021-ம் ஆண்​டின் தகவல் தொழில்​நுட்ப விதிகளில் இதற்​காக திருத்​தங்​களை மேற்​கொள்ள அரசு திட்​ட​மிட்​டுள்​ளது” என்​றார்​.

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மத்தியில் தற்கொலை மரணங்கள், தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் போக்குகள் அதிகரித்த சூழலில், 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளப் பயன்படுத்துவதற்கான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் இவ்வாறான தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தத் தடையானது, சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதால் ஏற்படும் சோஷியல் மீடியா அடிக்‌ஷன் பிரச்சினைகள், வயதுக்கு மீறிய விஷயங்களுக்கு ஆன்லைனில் எக்ஸ்போஸ் ஆவதால் குழந்தைகளுக்கு தம் சுயபிம்பத்தின் மீது ஏற்படும் குழப்பநிலை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுதல், செல்போன் பயன்பாட்டுக்கு அடிமையாதல் போன்ற பல பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கை என்று ஒருபுறத்திலிருந்து ஆதரவுக் குரல் குவிகிறது.

மறுபுறம், இவ்வாறாக தடை விதித்தல் என்பது வளரும் குழந்தைகளை ஒரு முக்கியமான தகவல் ஆதாரத்திலிருந்து விலக்கி வைக்கும் செயல். இது அவர்களின் சுய வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் செயல். அதுமட்டுமின்றி அவர்களுக்கான ஓர் ஆன்லைன் சமூகத்தை உருவாக்கத் தடை விதிக்கும் எதேச்சதிகாரப் போக்கு என்று எதிர்ப்பும் பதிவாகி வருகிறது. அதேபோல் “இத்தகைய தடையானது, நலிந்த பின்னணி கொண்ட குழந்தைகளின் மனநலனைப் பாதிக்கும். அவர்களுக்கு தகவல் பற்றாக்குறையும் ஏற்படும்” என்று குரல்களும் எழுந்து வருவது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT