முதல் பாகமாக ‘துரந்தர்’, பாகிஸ்தானின் பயங்கரவாத நிழல் உலகத்தைப் பற்றிய விஷயங்களை மேலோட்டமாக பேசியது என்றால், தற்போது வெளிவந்துள்ள இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரெவெஞ்ச்’ பல மடங்கு முன்னேறி அப்பட்டமாக பல விஷயங்களை முகத்தில் அறைகிறது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஓடக் கூடிய படத்துக்கு ஏற்ப ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை எழுதியதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர் ஆதித்யா தர். பிரச்சார கருத்துகளை தாண்டி திரைக்கதை அளவில் இப்படம் நிச்சயம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. முழுமையான விமர்சன வீடியோ இது.