உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. தூதர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நியூயார்க்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் நடைபெறும் வன்​முறை தொடர்​பாக ஐக்​கிய நாடு​கள் சபை கவலை தெரி​வித்​துள்​ளது. ஐ.நா. சபை​யின் மனித உரிமைகளுக்கான தூதர் வோல்​கர் துர்க் நேற்று முன்​தினம் ஜெனி​வா​வில் இருந்து ஓர் அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில் அங்கு நடந்து வரும் போராட்​டங்​கள், வன்​முறை​கள் கவலை அளிக்கின்றன. அங்​குள்ள கூட்டு அவாமி போராட்​டக் குழுவை (ஜேஏஏசி) சேர்ந்​தவர்​கள் மற்​றும் பாது​காப்​புப் படை​யினர் இடையிலான மோதலில் பலர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இங்கு நடந்து வரும் போராட்​டத்​தால் அந்த மண்​டலத்​தில் அமைதியின்மை ஏற்​பட்​டுள்​ளது. எனவே, போராட்​டக்​காரர்​கள் மற்​றும் பாது​காப்​புப் படை​யினர் உயி​ரிழந்த சம்​பவங்​கள் குறித்து நடுநிலை​யான விசா​ரணையை மேற்​கொள்ள வேண்​டும். அமைதியின்மை தொடர்​பான அனைத்து உயி​ரிழப்​பு​கள் குறித்தும் விரை​வான, முழு​மை​யான மற்​றும் சுதந்​திர​மான விசாரணை நடத்​தப்பட வேண்​டும்.

மேலும், கைது செய்​யப்​பட்ட ஜேஏஏசி அமைப்​பினருக்கு சட்ட ஆலோ​சனை வழங்​குதல், அவர்​களது குடும்​பத்​தா​ருடன் தொடர்பு கொள்​ளும் விஷ​யங்​கள் போன்​றவை முழு​மை​யாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்​டும். அங்கு விதிக்​கப்​பட்​டுள்ள இணை​யச் சேவை கட்​டுப்​பாட்​டு​களை நீக்க வேண்​டும். உள்​ளூர் மக்​களின் அடிப்​படைப் பிரச்​சினை​கள் மற்​றும் குறை​களுக்​குத் தீர்வு காண அர்த்​த​முள்ள, அனை​வரை​யும் உள்​ளடக்​கிய அரசி​யல் பேச்​சு​வார்த்​தையை நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரிவித்துள்ளார்​.

SCROLL FOR NEXT