உலகம்

வங்கதேசத்தில் 3-வது இந்து உயிரிழப்பு: சிறுபான்மையினர் மீது வன்முறை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேசத்​தில் மர்ம கும்பல் தாக்கியதில் இந்து மதத்தை சேர்ந்த 3-வது நபர் நேற்று உயி​ரிழந்​தார்.

வங்​கதேசத்​தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்​கப்​பட்​டு, முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால நிர்​வாகம் பொறுப்​பேற்​றது. அதன்​பிறகு கடந்த மாதம் மாணவர்​கள் மீண்​டும் நடத்​திய போராட்​டத்​தில் வன்​முறை ஏற்​பட்​டது. இதையடுத்து இந்​துக்​கள் மீதான தாக்​குதல் தொடங்​கியது. கடந்த மாதம் மட்​டும் 2 இந்​துக்​கள் படு​கொலை செய்​யப்​பட்​டனர். இதற்கு இந்​தியா கடும் கண்​டனம் தெரி​வித்​தது.

கடந்த டிசம்​பர் 18-ம் தேதி, வங்​கதேசத்​தின் மைமென்​சிங் மாவட்​டத்​தில் வசித்த ஜவுளி ஆலை தொழிலாளி திபு சந்​திர தாஸ் என்​பவரை வன்​முறை கும்​பல் கடுமை​யாக தாக்கி கொன்​றது. அதன்​பின் அவரது உடலை மரத்​தில் கட்டி எரித்​தது. அதன்​பின், கலிமோஹர் யூனியன் பகு​தியி​லில் ஹோசன்​டங்கா கிராமத்​தில் அம்​ரித் மண்​டல் என்​பவரை வன்​முறை கும்​பல் கொன்​றது.

இந்​நிலை​யில், கோனேஷ்வர் யூனியன் டிலோய் கிராமத்​தில் மருந்து கடை நடத்​தி வந்த கோகன் தாஸ் என்​பவரை கடந்த புதன்​கிழமை இரவு மர்ம கும்​பல் கூர்​மை​யான ஆயுதங்​களால் தாக்​கியது. பின்​னர் அவர் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​தது. இதையடுத்து பயங்கர அலறலுடன் கோகன் தாஸ், அரு​கில் இருந்த குளத்​தில் குதித்​தார்.

அலறல் சத்​தம் கேட்டு அக்​கம் பக்​கத்​தின் ஓடிவந்​தனர். அவர்​களைப் பார்த்து மர்ம கும்​பல் தப்​பி​விட்​டது. பின்​னர் கோகன் தாஸை பொது​மக்​கள் மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தாஸ் நேற்று பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “கடந்த புதன்​கிழமை மருந்து கடையை மூடி​விட்டு கோகன் தாஸ் வீட்​டுக்கு ஆட்​டோ​வில் சென்​றுள்​ளார். அப்​போது வழிமறித்து மர்ம கும்​பல் தாக்கி உள்​ளது. இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறோம்” என்​றனர்.

SCROLL FOR NEXT