வாஷிங்டன்: இன்ஸ்டாகிராம், முகநூல் பயன்படுத்தும் பதின்ம வயதினருக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் 29 மாகாணங்களுடன் ஏற்பட்ட 18 பில்லியன் டாலர் (ரூ. 1.71 லட்சம் கோடி) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இழப்பீட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 13-18 வயதுக்கு உட்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த செயலிகளில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவர மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
நீதிமன்ற ஒப்புதலுக்குப் பிறகு அமலுக்கு வரவுள்ள இந்த விதிமுறைகள் அடுத்த 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். இதன்படி, முகநூல், இன்ஸ்டா ஆகிய 2 செயலிகளையும் சேர்த்து சிறுவர்கள் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.